Sunday, December 29, 2013

கடலுக்கு கரிப்புத் தன்மை இருப்பது எதனால் தெரியுமா?

கடலுக்குள் வந்து சேரும் நதிகளும், ஓடைகளும், உப்புச் சத்தை பாறைகளிலிருந்தும், பூமியின் மேல் பரப்பிலிருந்தும் சிறுகச் சிறுக அடித்து வந்து, கடலில் சேர்ப்பதால்தான். கடல் நீர் ஆவியாக மாறி, மீண்டும் மழையாகப் பொழிகிறது. உப்பு மட்டும் கடலிலேயே, தங்கி விடுகிறது!

கடலுக்கு நீல நிறம் கொடுப்பது வானம் தானே? வானம் நீலநிறமாக இருப்பதால் தானே கடல் அதை பிரதிபலிக்கிறது?

இல்லையில்லை... கடலுக்கு நீல நிறம் கொடுப்பது சூரியன்தான். உண்மையில் கடல் நீர் நிறமற்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் பல நிற ஒளிக்கதிர்களுள், நீல நிறத்தை தவிர மற்ற அனைத்தையும் கடல் கிரகித்துக் கொள்கிறது. நீலநிறக் கதிர்கள்மட்டும் கடலால் எதிரொளிக்கப்படுவதால், அது, நீலநிறமாகத் தோன்றுகிறது!

சந்திரனுக்கும், கடல் கொந்தளிப்புக்கும் கூட சம்பந்தம் இருக்கிறதாமே?

ஆமாம்... முழு நிலவின் ஈர்ப்பு சக்தியால், கடல் நீர் எழுச்சியடைந்து மேலெழும்புகிறது. அதே போல், உலகின் பூமிப் பகுதியும் கொந்தளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பு, சில சமயங்களில் ஆறு அங்குலம் கூட எழுந்து, மீண்டும் அடங்குகிறதாம்.

உலகப்பரப்பில் 70 சதவிகிதம் தண்ணீர் தான். ஆனால், இதில் ஒரு சதவிகிதம் தான் குடிக்க லாயக்கானது. ஜெர்மனியில் உள்ள ஹெமல் ஸ்டார் பர் என்ற ஏரியின் மேல் பகுதி நீர், இனிப்பாகவும், அடிப்பகுதி நீர் கசப்பாகவும், இருக்கும். அதனால், இதற்கு, "ஸீ ஆப் மேட்ரிமனி' என்று பெயர். "மேட்ரிமனி' என்ற ஆங்கில வார்த்தைக்கு, மண வாழ்க்கை என்று பொருள்.


சினிமா பிரபலங்களையும், அவர்கள் இனிஷியலையும் நமக்குத் தெரியும். இந்த இனிஷியல்களின் விரிவாக்கம், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ:
1. டி.ஆர். (திருக்காம்புலியூர் ரங்காராவ்) ராமச்சந்திரன்.
2.டி.எஸ். (திருநெல்வேலி சுப்ரமணிய பிள்ளை) பாலையா.
3.பி.எஸ். (பொள்ளாச்சி சின்ன முதலியார்) வீரப்பா.
4.கே.ஆர்.(கும்பகோணம் ராமபத்திர செட்டியார்) ராமசாமி.
5.எம்.கே. (மாயவரம் கிருஷ்ண மூர்த்தி ஆசாரி) தியாகராஜ பாகவதர்.
6.என்.எஸ்.(நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை) கிருஷ்ணன்.
7.எம்.கே.(மதராஸ் கந்தசாமி) ராதா.
8.ஏ.பி.(அக்கமாப் பேட்டை பரமசிவம்) நாகராஜன்.
9.கே.ஏ.(காரைக்கால் அருணா சலம் ஆசாரி) தங்கவேலு.
10.எஸ்.வி. (செங்கோட்டை வெள்ளையன் ஆசாரி) சுப்பையா.

No comments:

Post a Comment