Friday, November 7, 2014

மனிதன் வாழ்வாங்கு வாழும் கலை

எவனொருவன் பின்வரும் முறையில் வளர்ச்சியை வாழ்கையில் பதிக்கிறானோ அவனே இவ்வுலகில் மிசைபட வாழ்ந்தவனாகிறான். 1. தான், 2. குடும்பம், 3. சுற்றம், 4. ஊர், 5. நாடு, 6. உலகம் என்ற வரிசையில் வாழ்ந்து வளர்ச்சியை காண வேண்டும்.

தான் - கல்வி மற்றும் ஒழுக்கத்தில் வளர்தல் மற்றும் சம்பாதித்தல்.

குடும்பம் - பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன்/மனைவி மற்றும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கேற்பது, நேசிப்பது.

சுற்றம் - முடிந்தவரை பங்காளிகள் மற்றும் உறவுமுறைகளின் வளர்ச்சிக்கு உதவுவது.

ஊர் - பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவமனை, வங்கி, அஞ்சலகம், கோயில், குளம், பூங்கா இன்னபிற வசதிகள் அமைந்திட ஊர் மக்களோடு கலந்து ஒத்து வாழ்தல்.

நாடு - ஆட்சியமைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், அறிவியல்/தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்றவற்றுக்காக உழைத்தல்.

உலகம் - உலக மாற்றங்களைப் பற்றிய அறிவு, பிரச்சினைகளை இயற்கையோடு இயைந்து தீர்த்தல், இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

இதற்கான உளப்பயிற்சியும், உடற்பயிற்சியும், முயற்சியும் நாள்தோரும் மேற்கொள்ளப்பட வேண்டும். முயற்சி மட்டுமே வெற்றி தருவதில்லையாதலால், இறைவன் மற்றும் பெரியோரின் ஆசியை வணங்குதல் உறுதுணையே.

No comments:

Post a Comment