Friday, February 15, 2013


சமையல் செய்வதும் யாகம் செய்வது போலதான் ..!

வீட்டில் உணவு சமைக்கும் போது சுகாதாரத்துடன் மட்டுமின்றி, பக்தி உணர்வுடன் சமைக்க வேண்டியதும் அவசியம். உணர்வு அலைகளுக்கு அதிக சக்தி உண்டு என்பதால், சமைக்கும்போது ஒரு யாகம் செய்வதுபோல, பக்தி உணர்வோடு, நல்ல எண்ணங்களோடு சமைக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிடும் உணவுதான் குருதியாகி பின் உணர்வுகளுக்கும் காரணமாகிறது. பொது இடங்களிலும், வீட்டிலும் - எங்கு சமைத்தாலும் இதைக் கடைப்பிடித்தால் நல்லது. இப்படி சமைக்கும்போது உணவில் உள்ள தோஷங்களை, பக்தி உணர்வு நீக்கிவிடும். அதுவும் திருமணம் மற்றும் பலபேருக்கு சமைக்கும் இடங்களை ஒரு யாகசாலைபோலதான் கருதவேண்டும், சமைப்பவர்களும் ஒரு ஹோமத்தை நடத்துபவர்கள் போலத்தான். உணவு விடுதிகளில் நல்ல உணர்வுகளுடன் சமைப்பவர்கள் சமைத்தால், உண்பவர்களது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மன உணர்வுகளும் சீராக இருக்கும். சிலர் சமைப்பதை ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள் என்றால் எவ்வளவு புண்ணிய காரியம். எனவே சமையல் மூலமாகவும் உணவு மூலமாகவும் பக்தி உணர்வை வளர்க்க முடியும். நல்ல குணத்தோடு பக்தி உணர்வை வளர்க்க வளர்க்க, அது நம்மை எப்போழுதும் நல்லவனாக இருக்கச் செய்யும். (யுத் பாவம் தத் பவதி) எதை நினைக்கிறாயோ, உணர்கிறாயோ அதுவாய் நீ ஆகிறாய் என்பது வேதக்கூற்று.

No comments:

Post a Comment