Thursday, February 21, 2013


தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!
 
 
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு :-                          1812 திருக்குறளின் முதல் பெயர் :-                                                                      முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் :-                                                        133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் :-                           380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் :-                            700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் :-                         250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் :-                                      1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள் :-                                                               14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் ;-                                       42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் :-                                         அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் :-                                             நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை :-                                          குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து :-              ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் :-                         குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் :-                                பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து:னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் :- ளீ,
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் :-                                    தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் :-                தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் :-                   மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் :ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் :- பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் :-                                            ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment