Thursday, July 3, 2014

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:

*விவசாய பொருட்களை சந்தைப்படுத்த, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குளிரூட்டப்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

*நதிகளை இணைப்பது மட்டுமின்றி, தேவையான இடங்களில் கதவணைகள், தடுப்பணைகள் கட்டவேண்டும்.

*60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

*இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின், பயிர் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும். 4 சதவீத வட்டியில், வேளாண் நகைக்கடன் வழங்க வேண்டும்.

*'ஜப்தி' நடவடிக்கைகள் எடுப்பதை ஒழிக்க வேண்டும். சிட்டா அடங்கலை வைத்து, நான்கு லட்சம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்க வேண்டும்.

*ஊராட்சி ஒன்றியம் வாரியாக, குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும்.

*முழுவதும் உள்ள விவசாயிகளிடம் நல வரியை வசூலிக்க வேண்டும். வெள்ளம், வறட்சி, புயலால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, நல வரியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். இதற்கு என, தனி வாரியம் அமைக்க வேண்டும்.

*தனி நபர் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி, விவசாயிகளின்,' பிரீமியம்' தொகையை, அரசே செலுத்த வேண்டும்.

*நாட்டின் தேவைக்கான சர்க்கரை போக, மீதமுள்ள சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கரும்பு பாகில் இருந்து, 'எத்தனால்' எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

*மானாவாரி நிலங்களில், சோளம் பயிரிட்டு அதில், இருந்து, 'எத்தனால்' எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

*எரிபொருளில், 'எத்தனால்' பயன்பாட்டை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம், வாகன எரிபொருளுக்காக, செலவிடப்படும், எட்டு லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சப்படும்.

*ஆந்திர மாநில அரசு, கரும்பு கொள்முதல் வரியாக, ஒரு டன்னுக்கு, 60 ரூபாய் வசூல் செய்து, அதை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இத்திட்டத்தை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும்.

*விவசாய விளைபொருள் நிர்ணய ஆணையத்தை உருவாக்க வேண்டும். இதில், மத்திய, மாநில வேளாண் அதிகாரிகள் மட்டுமின்றி, விவசாயிகளையும் உறுப்பினர் ஆக்க வேண்டும்

No comments:

Post a Comment