Monday, August 11, 2014

விடுகதை 1

பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? கண்கள்

அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன? நீர்

வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? கத்தரிக்கோல்

படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன? கனவு

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்? நாக்கு

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன? சிரிப்பு

எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? நண்டு

ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? கண்ணீர்

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? மெழுகுதிரி

ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்? செருப்பு

பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு

தட்டச் சீறும் அது என்ன? தீக்குச்சி

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்

வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்? பூட்டும் சாவியும்

எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன ? மின்விசிறி

அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ? கடல்நீர்

மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ? சிலந்தி

ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ? கரும்பு

பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன ? மிளகாய்

பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன? இலவம்பஞ்சு

ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான். அவன் யார்? யானை

"உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்" அது என்ன? தராசு

"ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்

No comments:

Post a Comment