Thursday, August 7, 2014

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகள்

இன்றைய சூழலில், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதே நேரத்தில், இருசக்கர வாகன பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். சில அடிப்படை விதிகள்:

* இருசக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து, பின் ஓட்ட வேண்டும்.

* ஒரே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வேண்டும். நல்ல பெட்ரோல் பங்க் எது என்பதை, சுய அனுபவம் மூலமோ, நண்பர்களின் ஆலோசனையின் பேரிலோ அறிந்து கொள்ளலாம்.

* வாரத்திற்கு ஒருமுறை முன்சக்கரம், பின் சக்கரத்திற்கு காற்று நிரப்புவது அவசியம்.

* 2,500 முதல், 3,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை, வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம். சர்வீசின் போது, பழைய ஆயிலை எடுத்துவிட்டு, புதிய ஆயிலை ஊற்றுவதும் அவசியம்.

* 15 நாட்களுக்கு ஒரு முறை வண்டியை துடைக்க வேண்டும். இதனால், வாகனத்தில் படியும், தூசு மற்றும் கரையை அகற்ற முடியும்.

* வாகனத்தை ஓட்டும் போது கிளெச்சைப் பிடித்துக் கொண்டும், பிரேக்கை அழுத்திக் கொண்டும் ஓட்டக் கூடாது. அப்படி ஓட்டினால், வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும்.

* கண்டிப்பாக, ‘ஹெல்மட்’ அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.

* மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.

* வாகனத்தை ஓட்ட துவங்கும் முன், ஆயில், காற்று, ஹாரன் இயக்கம், பெட்ரோல் சரியாக இருக்கிறதா என, சோதிக்க வேண்டும்.

* வாகனத்தை இயக்குவதற்கு முன், சைடு ஸ்டாண்டை, எடுத்து விட வேண்டும்.

* மொபைலில் பேசிக் கொண்டு அல்லது பாட்டுக் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது; பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹாரன் சத்தம் கேட்காது.

* சாலையின் நடுவே வாகனம் ஓட்ட வேண்டாம்.

* வாகனத்தின் சைடு கண்ணாடியைப் பார்க்காமல், இடது, வலது புறம் திரும்பாதீர்கள்.

* பகலில், வாகனத்தின் முகப்பு விளக்கு எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* வாகன நிறுவன அவசர உதவி எண்களை குறித்து வைத்திருக்கவும்

* வண்டி தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பிரதி எடுத்து வைத்திருக்கவும்

No comments:

Post a Comment