Tuesday, October 1, 2013

கல்லிடைக்குறிச்சி அப்பளம்

தமிழில் "அப்பளித்து' என்றால், சமன் செய்தல் என அர்த்தம். மாவை உருட்டி பின், சமன் செய்வதால் தான் அப்பளம் எனப் பெயர் வந்தது. வடமொழியில் "பப்படஹ' என்றால் பொரிதல் என அர்த்தம். அதனால் தான் "பப்பட்' என பெயர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு பெயர் பெற்றது. கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் வெளிநாடு களுக்கும் செல்கிறது. புளிக்குழம்புக்கு அரிசி அப்பளம், சாம்பாருக்கு உளுந்து அப்பளம் என உணவியல் சார்ந்த வழக்கம் உண்டு. நாகர்கோவில் பகுதியில் ஏழிலைக்கிழங்கு என்னும் மரவள்ளிக்கிழங்கு மாவில் அப்பளம் செய்வர். முன்பு பிரண்டைச்சாறு சேர்த்து அப்பளம் செய்வர். தற்போது சமையல் சோடா சேர்க்கின்றனர். விருந்தோடு தொடர்புடைய உணவுப்பொருள் என்பதால் சிரார்த்தம் போன்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அப்பளம் பரிமாறும் வழக்கம் இல்லை.
எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் கழிவுகள்

தமிழகத்தில் பெருகிவரும் உடைந்த, தேவையற்ற "-கழிவுகள்' எனப்படும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன.

உடைந்த, பயனற்ற கம்ப்யூட்டர்கள், வீடியோ கேம்கள், மொபைல் போன்கள், சி.டி.,கள், டி.வி.டி.,கள், டிவி டிஸ்பிளேகள், மவுஸ், சிப்ஸ், மதர்போர்டு போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும், பிரிட்ஜ், ஓவன், வாஷிங்மிஷின், அலாரம், ஏர்ஹாரன் போன்ற எலக்ட்ரிக் பொருட்களும் "-கழிவுகளாக கொட்டப்படுகின்றன. "பெர்சனல் கம்ப்யூட்டர்கள்' அதிகம் வந்த பின் -கழிவுகள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 5 கோடி கம்ப்யூட்டர்கள் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில், 7.5 கோடியை தாண்டும். முன்பு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 7 ஆண்டுகள். தற்போது 2 முதல் 3 ஆண்டுகளாகி விட்டது. நாடு முழுதும் ஐம்பது லட்சம் பழைய கம்ப்யூட்டர்கள் சிதைந்து உள்ளன. இக்கழிவுகள் மக்காதவை. இக்கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும், தீங்கு விளைவிக்கக்கூடிய காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன. -கழிவுகள் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூருவில் அதிகம் கொட்டப்படுகின்றன. மும்பையில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு, 25,350 டன் - கழிவுகள் கிடைக்கின்றன. உபயோகமற்ற பேட்டரி செல்களும் கொட்டப்படுகின்றன. இதனால் நீர், நிலம், காற்று ஆகியவை அதிகம் பாதிக்கப்படுகின்றன. இக்கழிவுகளில், 5 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. மீதி 95 சதவீத கழிவுகளை ஒன்றும் செய்வதில்லை. -கழிவுகள் கொட்டுவதில், இந்திய அளவில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. தமிழகத்திற்கு 2-வது இடம். ஆண்டிற்கு 13,486 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

சென்னை, கோவை, மதுரையில் இக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவை பயனற்று போகும் போது கழிவுகளின் அளவு அதிகரிக்கும். -கழிவுகள் வெளியேறுவதில் தமிழகம் முதல் இடத்திற்கு செல்லும். இக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்கள் டில்லி, மீரட், பெரோசாபாத், பெங்களூரு, மும்பையில் உள்ளன. சென்னை, மதுரையில் மறுசுழற்சி செய்பவர்கள் குறைவு. இதனால் இக்கழிவுகளால் தீமை அதிகரிக்கும். அதிகரித்து வரும் இக்கழிவுகளால் ஏற்படும் பிரச்னையை தீர்ப்பது குறித்து, மதுரை காமராஜ் பல்கலை சுற்றுச்சூழல் துறை தலைவரும், .நா.சபையின் தெற்கிழக்காசிய இயற்கை வளப்பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான முத்துச்செழியன் கூறியதாவது: உடைந்த, பயனற்ற அங்கீகரிக்கப்பட்ட -கழிவுகளை, எந்த நிறுவனம் இச்சாதனங்களை உருவாக்கி,விற்பனை செய்ததோ அவர்களிடமே வழங்க வேண்டும். இச்சாதனங்களை முழுமையாக பிரித்து அதன் பின் "டிரீட்மென்ட்'க்கு அனுப்பி உலோகங்களை காய்ச்சி வடித்து பிரிக்கலாம். வெளிநாடுகளில் இருந்து, இக்கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்ககூடாது. உள்ளாட்சி கழிவுகளை ஊருக்கு வெளியே வைப்பது போல 5 கி.மீ., தள்ளி கிடங்குகளில் வைக்க வேண்டும். பிற திடக்கழிவுகளுடன் -கழிவுகளை சேர்க்ககூடாது. -கழிவுகளை தடுப்பது குறித்து கடுமையான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும். இக்கழிவுகளின் அபாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், என்றார்.
-கழிவுகளால் கெடுதிகள்:
 
துத்தநாகம்-மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும், ரத்த ஓட்டத்தையும், சிறுநீரக செயல்பாடு, உயிரணு உற்பத்தி, சுரப்பிகளையும் பாதிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். காட்மியம்: சிறுநீரகம், கல்லீரல். இருதயம் ஆகியவற்றை பாதிக்கும்.பாதரசம்: குழந்தைகளின் மூளைவளர்ச்சி, கர்ப்பபை, சிறுநீரகத்தை பாதிக்கும்.குரோமியம்: மரபணுக்களை பாதிக்கும்.பிளாஸ்டிக்: வெளியாகும்"டையாக்சின்' அனைத்து பாதிப்புகளையும் தரும்.பேரீயம்: மூளை தசைவீக்கம், தசைநார் வளர்ச்சி, கல்லீரல், இருதயம், மண்ணீரல், பித்தப்பை பாதிக்கும்.பெரீலியம்: "கம்ப்யூட்டர் மதர்போர்டில்' இது இருக்கும்.புற்றுநோய், தோல்நோய் ஏற்படுத்தும்.டோனர் கழிவுகளால் புற்றுநோய், மூச்சுக்குழல் அடைப்பு போன்றவை ஏற்படும்.

Friday, April 5, 2013

தேசிய கடல்சார் தினம்



இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான "எஸ்.எஸ்.லாயல்டி', 1919, ஏப். 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.

கப்பல் துறையின் பணிகள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில், கப்பல் போக்குவரத்து துறை முன்னோடியாக உள்ளது. கப்பல் துறையில் பணிபுரிவோர், பெரும்பாலும் கடல் பகுதியிலேயே இருக்க வேண்டும். இதனால் இவர்களது பணி, மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. கப்பல்துறை தொடர்பான கல்லூரிகளில் மாணவர்கள், இத்தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால், மாணவர்கள் தயங்காமல் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம்.

எவ்வழி போக்குவரத்து அதிகம்: உலகின் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய கடற்கரையின் நீளம் 7516 கி.மீ. இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது. நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் (கோல்கட்டா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, மும்பை, ஜவஹர்லால் நேரு, கண்ட்லா) உள்ளன. இது தவிர 182 நடுத்தர, சிறிய துறைமுகங்களும் செயல்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி சார்பில் எஸ்.எஸ்.லாயலிட்டி என்ற கப்பல், பிரிட்டனுக்கு முதல் பயணத்தைத் துவக்கி வரலாறு படைக்கப்பட்டது. 1964 ஏப்., 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.

ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம், மும்பையிலிருந்து லண்டனுக்கு, முதல் இந்திய கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி பயணம் மேற்கொண்ட ஏப்., 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து துறையின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு தெரிய செய்வதே இந்த கடல்சார் தின கொண்டாட்டத்தின் நோக்கமாகும். கப்பல்துறையின் தேவை, கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த ஒருவார கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும், துறைமுகங்களிலும் நாட்டின் கடல் எல்லையிலும் அமைதியாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லும் இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் சேவைகளைக் மிகக்குறைவான மக்களே அறிந்துள்ளனர். கடல்சார் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் கப்பல் துறை மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மற்றும் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மும்பை, கோல்கட்டா, சென்னை,கோவா,விசாகப்பட்டினம், கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களிலும் கண்ட்லா, ஜாம்நகர், பாரதீப், மங்களூர், தூத்துக்குடி, கார்வர் உள்ளிட்ட இதர துறைமுகங்களிலும் கடல்சார் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது உயிரிழந்த கடற்படை வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படும். டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.
தேசிய கடல்சார் தினம்




இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான "எஸ்.எஸ்.லாயல்டி', 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.







கப்பல் துறையின் பணிகள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில், கப்பல் போக்குவரத்து துறை முன்னோடியாக உள்ளது. கப்பல் துறையில் பணிபுரிவோர், பெரும்பாலும் கடல் பகுதியிலேயே இருக்க வேண்டும். இதனால் இவர்களது பணி, மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. கப்பல்துறை தொடர்பான கல்லூரிகளில் மாணவர்கள், இத்தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால், மாணவர்கள் தயங்காமல் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம்.







எவ்வழி போக்குவரத்து அதிகம்: உலகின் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய கடற்கரையின் நீளம் 7516 கி.மீ.,. இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது. நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் (கோல்கட்டா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, மும்பை, ஜவஹர்லால் நேரு, கண்ட்லா ) உள்ளன. இது தவிர 182 நடுத்தர, சிறிய துறைமுகங்களும் செயல்படுகின்றன.







இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி சார்பில் எஸ்.எஸ்.லாயலிட்டி என்ற கப்பல், பிரிட்டனுக்கு முதல் பயணத்தைத் துவக்கி வரலாறு படைக்கப்பட்டது. 1964 ஏப்., 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.









ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.







ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம், மும்பையிலிருந்து லண்டனுக்கு, முதல் இந்திய கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி பயணம் மேற்கொண்ட ஏப்., 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து துறையின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு தெரிய செய்வதே இந்த கடல்சார் தின கொண்டாட்டத்தின் நோக்கமாகும். கப்பல்துறையின் தேவை, கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த ஒருவார கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும், துறைமுகங்களிலும் நாட்டின் கடல் எல்லையிலும் அமைதியாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லும் இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் சேவைகளைக் மிகக் குறைவான மக்களே அறிந்துள்ளனர். கடல்சார் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் கப்பல் துறை மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மற்றும் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மும்பை, கோல்கட்டா, சென்னை,கோவா,விசாகப்பட்டினம், கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களிலும் கண்ட்லா, ஜாம்நகர், பாரதீப், மங்களூர், தூத்துக்குடி, கார்வர் உள்ளிட்ட இதர துறைமுகங்களிலும் கடல்சார் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது உயிரிழந்த கடற்படை வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படும். டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.

Wednesday, April 3, 2013

ஊறுகாய்
வெயில் காலத்தின் துவக்கம், மாவடு / ஊறுகாய் சீசன். கோடை காலத்தில் மாங்காய் ஊறுகாய் பரவலாக காணப்படும். இந்தியாவில் மட்டுமல்ல, ஜப்பானிலும் விருந்தில் கடைசியாக பரிமாறப்படும் உணவு ஊறுகாய் வகை. இந்தியாவில் மாநிலங்களைப் பொறுத்து ஊறுகாய் வகைகள் மாறுபட்டாலும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என எங்கும் மாங்காய் ஊறுகாய் பொதுவான ஊறுகாயாக உள்ளது. ஆந்திராவில் மாங்காய் ஊறுகாயை அதன் கொட்டையுடன் நறுக்கி, ஆவக்காய் ஊறுகாய் என செய்வர். இது தவிர கோங்குரா ஊறுகாய், கேரளாவில் பச்சை மிளகு ஊறுகாய், ஜாதிக்காய் ஊறுகாய், காசியில் பேரீச்சம்பழ ஊறுகாய், காஷ்மீரில் ஆப்பிள் ஊறுகாய், பஞ்சாபில் டர்னிப், கேரட், காலிபிளவர் ஊறுகாய், மகாராஷ்டிராவில் பச்சை மஞ்சளில் ஊறுகாய் செய்வர். உடலுக்கு தீங்கு, ஊறு செய்வதால்தான், ஊறுகாய் என பெயர் வந்தது என, இயற்கை மருத்துவம் கூறுகிறது.
புதிய வர்த்தகம்



களிமண்ணைப் பயன்படுத்தி, செங்கல் செய்வர். செங்கல் செய்ய, நீர்நிலைகளில் இருந்து தான் களிமண் எடுப்பர். தற்போது நீர்நிலைகள் இல்லை. நீர்நிலைகள் இல்லாததால் மண்ணும் இல்லை. இதனால் செங்கல் தயாரிக்கும் சூளைகளுக்கு மண் கிடைக்காத சூழல் உள்ளது. தற்போது மழையின்றி விவசாயம் பொய்த்து வருவதால், விளைநிலத்தில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. இதற்கென நிலங்களை விற்க வேண்டிய அவசியம் இல்லை. மண்ணை மட்டும் விற்றால் போதுமானது. பல கிராமங்களில் தற்போது இந்தப் புதிய வர்த்தகம் தான் நடைபெறுகிறது. மேற்பரப்பில் காணப்படும் வளமான மண் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படாமல், செங்கல் சூளை நிறுவனங்களுக்கு பயன்படுகின்றன. இதனால் மழை பெய்து, விவசாயம் நடைபெறும் போது விளைச்சல் குறையும்.

Wednesday, March 27, 2013

கொல்லிமலை


கோடை கால சுற்றுலாவில், கொல்லி மலை ஏனோ இடம் பெறுவதில்லை. 70 'ஹேர்பின்' வளைவுகளைக் கொண்ட கொல்லி மலை, மற்ற மலைவாசஸ்தலங்களைப் போல பிரபலம் ஆகவில்லை. ஏனெனில் கொல்லிமலையை சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழ்கின்ற ஆன்மிகம் சார்ந்த புனித மலையாக கருதுவதால், இன்ப சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தின் எல்லா கோடைவாசஸ்தலங்களிலும் கோடை விழா, கோடையில் தான் நடத்தப்படும். ஆனால் கொல்லி மலையில் மட்டும் விழா, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று நடத்தப்படும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியைச் சிறப்பிக்கும் வகையில்தான், கொல்லி மலையில் கோடை விழா நடைபெறும். கொல்லி மலையில் தமிழக அரசு நடத்தும் தங்கும் விடுதிகள் மட்டுமே உள்ளன. தனியார் விடுதிகள் இல்லை.